நான்கு வேடங்கள்

Written by

in

//அறம், பொருள், இன்பம், வீடு என இவை நான்குமே முக்கியமானவை. எவையுமே தவிர்க்கக்கூடியவை அல்ல. ஏனென்றால் இவை ஒன்றை ஒன்று சார்ந்தவை. ஒன்றில்லாமல் பிறிதொன்று நிறைவடையமுடியாதென்பதே வாழ்க்கையின் விதிகளில் முக்கியமானது.

உங்களைப்போன்றவர்கள் செய்யும் பிழை என்னவென்றால் இலக்கியம் போன்ற தீவிரமான ஒன்றில் ஈடுபடும்போது பிற அனைத்துமே முக்கியமற்றவை என்று எண்ணிக்கொள்வதுதான். அவற்றை அலட்சியம் செய்வதும், அவற்றில் முழுமனதுடன் ஈடுபடாமலிருப்பதும் உங்களைப்போன்றவர்களின் வழக்கமாக இருக்கிறது.
ஆனால் அதேசமயம் அவை அளிக்கும் எல்லா வசதிகளும் இன்பங்களும் உங்களுக்குத் தேவையாகவும் இருக்கிறது. அதாவது விதைக்காமல் ,உழைக்காமல் அறுவடை தேவையாக இருக்கிறது. சமூகஇடம் தேவை, சமூகஅடையாளம் தேவை, குடும்பமும் வசதிகளும் தேவை. ஆனால் அதற்காக கவனத்தைக் கொடுக்கமுடியாது என்கிறீர்கள்.
ஏன் என்று உங்களிடம் ஈவிரக்கமில்லாமல் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், புரியும். அது வெறும் அகங்காரம். நான் இந்த அன்றாட உலகியல் விஷயங்களுக்கெல்லாம் ஒருபடி மேலானவன் என நீங்கள் உங்களைப்பற்றி எண்ணிக்கொள்கிறீர்கள். நான் இதைப்போய் செய்வதா, என் கவனத்தை இதற்கெல்லாம் கொடுப்பதா என்று நினைக்கிறீர்கள்.
from Facebook http://ift.tt/1HtqrGZ
via IFTTT