//சாராயக்காசில்தான் அரசியலே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அனைத்து இலவசங்களும் டாஸ்மாக்கால்தான். அவற்றிலுள்ள ஊழலே அரசியலின் கொண்டாட்டம்.டாஸ்மாக் தமிழக உழைப்பாளிகளை ஒட்டுமொத்தமாக அழித்துக்கொண்டிருக்கிறது
…
குடி இந்தியாவின் அடித்தள மக்களின் வாழ்க்கையை, கிராமப்பொருளியலைச் சூறையாடுவதைக் கண்ட காந்தி அதற்கெதிரான போராட்டத்தை சுதந்திரப்போரின் மையமான செயல்திட்டங்களில் ஒன்றாக முன்வைத்தார்
…
தமிழகத்தில் குடியை அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்து அனைத்துச் சமூகத்தடைகளையும் அழித்து ஒரு தலைமுறையையே குடிக்குள் செலுத்தியவர் மு.கருணாநிதி. தமிழக வரலாற்றில் அவருக்கு ஏதேனும் இடமுண்டு என்றால் அது இதுதான்
…
சசிப்பெருமாளை திருப்பூர் அறம் அறக்கட்டளை விழாவில் நேரில் சந்திக்கவும் வணங்கி ஆசிபெறவும் வாய்ப்பு கிடைத்தது. அதிகம் பேசாத எளிய மனிதர். தன் வாழ்க்கையின் இலக்கென்ன என வகுத்துக்கொண்டவர். செயல்மூலம் காந்தியை அறிந்தவர். காந்தியை அறிய சிறந்த வழி அதுவே. அதன் மூலம் காந்தியாகவே ஆகிவிடுதல். காந்தியாகவே நான் கண்ட சசிப்பெருமாளுக்கு என் அஞ்சலி
from Facebook http://ift.tt/1IBCeld
via IFTTT