ஆணவகொலைகளும் தன்பரிசோதனையும்

Written by

in

//அலட்சியமாகச் சிரித்து எழுந்து செல்லும் ராமதாஸின் அந்தக் கொலைப்புன்னகை , அதுவே நிஜம்.

எது நோயோ அது அடையாளம் காணப்படவே இல்லை. அந்த மனநோய்களை பேணிக்கொள்ள உதவியாக அந்தப்பழியை வேறெங்காவது சுமத்தும் ஒரு மனநாடகமே இங்கே பெரியாரால் அறிமுகம்செய்யப்பட்டது. பார்ப்பன எதிர்ப்பு என்பது சுயபரிசோதனைக்கும் மாற்றத்துக்கும் தயாராக இல்லாத ஒரு சாதிவெறி-பழமைவாதக்கூட்டத்தின் பாவலா மட்டுமே. இந்த அப்பட்டமான உண்மையை எப்போது நாம் அங்கீகரிக்க ஆரம்பிக்கிறோமோ அங்கே தொடங்குகிறோம்

இனிமேலாவது நம் சமூகத்தை பீடித்திருக்கும் உண்மையான நோயை நோக்கிப்பேசுவோம். அதாவது நம்மை நோக்கி. நம் சாதிவெறியை நோக்கி. போலி எதிரிகளை நோக்கி கைசுட்டுவதை விடுவோம். நாம் இன்னும் பழங்குடிமனம் கொண்டவர்கள். இன்னும் நாகரீகமடையாத அரைமனிதர்கள். அதை ஒப்புக்கொள்வோம்.//
from Facebook http://ift.tt/1pMTjm6
via IFTTT