சமீபத்தில் படித்த புத்தகத்தில் மிக முக்கியமான புத்தகம், வழக்கமான இலக்கிய புத்தகத்திற்குர்ய சுவை குன்றாமால் படைக்கப்பட்ட கட்டுரை.
அறிமுகப்படுத்திய நண்பர் Gurumoorthy Vasan க்கு நன்றி பல.
நமது நாட்டின் விவசாயம் எப்படி படிப்படியாக சீரழிந்தது என்பதை மிக விரிவாக அதே சமயம் நமது தாத்தன் பாட்டன் காலத்து விவசாயம் எப்படி பார்க்கப்பட்டது என்பதையும் சும்மா வாய்க்கு வந்தது போல் சொல்லாமல், தகுந்த ஆதாரம் மூலம் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
ஜெயமோகனுடைய முன்னுரைக்காகவே வாங்கினேன், படித்ததும், ஒரு நெடிய பெருமூச்சு, சிறிது துயரம், எப்பொழுது மறுபடியும் எதிலும் முழுமையை பார்க்க பழகப்போகிறோமோ! நமது தலைமுறைக்கு நாம் விஷத்தை தான் விட்டுச் செல்லப்போகிறோம்..
The post பசுமைப் புரட்சியின் உண்மைக் கதை appeared first on thiru.