//காந்தி எப்போதுமே குவிமையமற்ற தொழில்நுட்பங்களை முன்வைத்தார்.
ராட்டை ஒரு தொழில்நுட்பக் குறியீடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சாண எரிவாயுவாகட்டும், பசு பாதுகாப்பு ஆகட்டும், லாரி பேக்கர் பின்னாட்களில் பிரபலப்படுத்திய உள்ளூர் கட்டடக் கலை தொழில்நுட்பம் ஆகட்டும், காந்தியத் தொழில்நுட்பமும் காந்தியப் பொருளாதாரமும் குவிமையத்தன்மை அற்றவை. மக்கள் தொழில்நுட்பங்கள்.
ஆனால் நேரு, குவிமையம் கொண்ட தொழில்நுட்பங்கள், பெரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் மூலம் பெரும் பொருளாதார மற்றும் சமுதாய மாற்றங்களைக் கொண்டுவந்துவிட முடியும் என நம்பினார். அப்படி ஒரு மாற்றம் வரும்போது, இந்தியாவின் பண்பாடும் மதிப்பீடுகளும்கூட மாறிவிடும் என நம்பினார். இந்தியப் பண்பாடு உருவாக்கிய சமுதாய அமைப்புகள், அவற்றின் மதிப்பீடுகள் ஆகியவற்றின் அழுகிய கனிகளிலிருந்து மரத்தையே வெறுக்கும் மனநிலைக்கு வந்து சேர்ந்திருந்தார் நேரு.
…
நம் ‘செக்யூலர்’ அரசாட்சி அமைப்புகளால் சில பத்தாண்டுகள்கூட காப்பாற்ற முடியாத இந்த நீர்நிலைகளை, ஆயிரமாண்டுகளுக்கு மேலாக ‘புண்ணியம்’ என்கிற பண்பாட்டு-உளவியல் கோட்பாட்டின் மூலம் காப்பாற்றி வந்திருக்கிறது நம் பாரம்பரியம். இந்தப் பண்பாட்டுச் சூழல் முற்றிலும் அறுந்துபோகும் முன்னர், அதில் தோய்ந்து வளர்ந்திருக்கிறார் டாக்டர் அப்துல் கலாம். இந்தப் பண்பாட்டு அறிவுதான், அவரை நேருவிய தொழில்நுட்பப் பார்வையிலிருந்த குறைபாடுகளை களைந்து, அதனை முழுமையடைய வைத்தது போலும்.//
from Facebook http://ift.tt/1SURuuQ
via IFTTT