ஒரு மேற்கத்திய கடவுள் நம்பிக்கையற்றவரின் ஆன்மீகத் தேடுதல். மொழிபெயர்ப்பு கொஞ்சம் கடினமானது, ஒரிரு அத்தியாயம் தாண்டியவுடன் பழக்கமாகிவிடலாம், முக்கியமான இடங்களில் மொழிபெயர்ப்பு புரியவில்லை, ஆங்கிலப்பதிப்பை நேரடியாக படிக்கவேண்டும். இன்றைய தலைமுறையில் ஆன்மீகத் தேடல் இருந்து ஆனால் மதம், குழு, ஆஸ்ரமம், மடாதிபதிகள் ஆகியவற்றின் நம்பிக்கை இன்றி தானே சுய பரிசோதனை செய்து அடையவேண்டும் என்ற குறிக்கோள் உள்ளவர்கள், கண்டிப்பாக படிக்க வேண்டியது. இதில் அவர்களுக்கு பதில்களும் உத்வேகமும் கிடைக்கும் என்று திடமாக நம்புகிறேன். எப்படியோ ஒரு ஐரோப்பிய மனிதனின் பார்வையில் இந்தியாவின் ஆன்மீக வரலாறாக (1930) கண்டிப்பாக படிக்கலாம். பால் ப்ரண்டனுக்கு நிகழ்ந்தது தற்செயலா, விதியா, ஊழ்வினையா அல்லது ரமணரின் கருணையா? ரமணரைப்பற்றி படிக்கும் பொழுது இளையராஜாவின் ரமணைப்பற்றி பாடிய பாடல்களை 15 வருடம் முன்பு தினமும் அலுவலகத்தில் கேட்டது பசுமையாக நினைவில் வருகிறது. வருடம் 2000ல் வாங்கிய பரணிதரனின் “அருணாச்சல மகிமை” எனது புத்தக அலமாரியிலிருந்து கூப்பிடுகிறது. நான் யார்?

Written by

in

from Facebook
via IFTTT