Skip to content
//யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். அப்போது அதன் முழு பொருளும் எனக்குப் புரியவில்லை. ஆனால் அது ஒரு விடையாக இருந்தது. வேண்டாம் என்ற முடிவை எடுப்பதே ஆகப் பெரிய சுதந்திரம் என்று தோன்றியது. துணிந்து வேண்டாம் என்றேன். அது ஒருகணம்தான். உண்மையில் அதைக்கடந்தபின்னரே நாம் உறுதியடைகிறோம்.அதற்காக இப்போது எண்ண எண்ண மகிழ்ச்சியே உருவாகிறது. நான் வேண்டாம் என்று சொன்ன அனைத்துமே பின்னர் எனக்கு விடுதலையையும் நிறைவையும்தான் அளித்துள்ளன.//