Skip to content
//தாகூர் சொன்னார், ”மிக மெல்லிய குரலில் பேசிய காந்திதான் மிக அதிகமான மக்களிடம் பேசினார்,” என்று. காந்தி உணர்ச்சிகளை தூண்டவில்லை. நம்மிடம் இருக்கும் உணர்ச்சி களே அடங்கும் விதத்தில்தான் அவர் எப்போதும் பேசினார். தேர்தல் களம் என்பது நாம் வேறுவழியில்லாமல் அரசியலைக் கவனிக்கும் நேரம். மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பேசுபவர்களைக் கூர்ந்து பார்ப்போம். யார் உணர்ச்சி பிரவாகமாகப் பேசுகிறாரோ அவர் வெறும் நடிகர் என்று புரிந்துகொள்வோம். அவர் ஹிட்லரின் வடிவம். நம் சிந்தனையை நோக்கி பேசுபவர்தான் அரசியல்வாதி.//