//காந்தியை புரிந்துகொள்வது மிக எளிது. காந்தியை ஏற்றுக்கொள்வதே கடினம். … ஆனால் அவர் என்ன சொல்கிறார் என நாமனைவருக்கும் தெரியும். இந்த ஆடம்பரத்துக்காக இந்த சுயநலத்துக்காக நாம் அழிக்கும் எல்லாவற்றையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். நாம் எதன் மேல் அமர்ந்திருக்கிறோம் நாம் எதனாலானவர்கள் என்று அவர் சொல்கிறார் … வரலாற்றின் எந்த தரப்புக்கும் அதற்கான இருத்தல்நியாயம் ஒன்றிருக்கலாம். எல்லா தரப்பும் பிற தரப்புகளுடன் போராடித்தான் தன்னை நிறுவிக்கொண்டு முன்னகர முடியும். ஆனால் அந்தப்போராட்டத்தை வன்முறை இல்லாமல் வெறுப்பு இல்லாமல் நிகழ்த்தமுடியும். நீயும் நானும் வரலாற்றின் இரு தரப்புகள் மட்டுமே என்ற புரிதலுடன் அதை முன்னெடுக்கமுடியும் … காந்தியின் அரசியல் அப்படித்தான் அமைந்திருந்தது. ஒற்றுமை மூலம் அறச்சார்பு மூலம் நம்மை நாம் மேம்படுத்திக்கொண்டு எதிர்தரப்பின் அறத்துடன் தீர்மானமான விடாப்பிடியான பேச்சுவார்த்தையை நிகழ்த்துவதையே அவர் போராட்டம் என்று சொன்னார். இருபதாம் நூற்றாண்டில் பேரழிவு இல்லாமல் வெற்றிகளை அடையக்கூடிய ஒரே போராட்ட வழி அதுவே என்று கற்பித்தார். அது தன் இறுதி விளைவாக வெறுப்பை உருவாக்குவதில்லை. … நீ சொல்லும் ஒரு சொல்லையேனும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஆனால் நீயும் நானும் ஒரே ஞானத்தேடலின் இருபக்கங்கள் என்ற பிரக்ஞை நம்மிடம் இருந்தால் நாம் எதைப்பற்றியும் விவாதிக்கமுடியும். விவாதத்தின் விளைவாக இரு சாராரும் வைத்திருக்கும் ஞானம் மேம்பட முடியும். இருவரும் தங்களை இன்னும் தெளிவாக கண்டடைய முடியும்

Written by

in

from Facebook
via IFTTT