கருத்துரிமையும் இடதுசாரிகளும்

Written by

in

//பொதுவாக இந்த ‘மதநிந்தனை’ ‘மனம்புண்படுதல்’ போன்றவை எல்லாம் இந்துமதத்திற்கும் இந்துப்பண்பாட்டுக்கும் முற்றிலும் அன்னியமானவை என்பதை மீண்டும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்.

இந்துப்பண்பாடு விவாதங்களை, விமர்சனங்களை, மீறல்களை, ஏன் அத்துமீறல்களைக்கூட ஏற்றுக்கொள்ளும்படித்தான் அமைந்துள்ளது.அப்படித்தான் இருந்தாகவேண்டும். ஏனென்றால் இந்துமதமும் அதன் ஆன்மிகமும் தத்துவமும் தொடர்ச்சியான விவாதங்கள், மறுப்புகள், விரிவாக்கங்கள் வழியாக வளர்ந்து செல்லும் இயல்பு கொண்டவை.

மதநிந்தனை என்னும் கருத்தை ஆதரிப்பவர், புண்படும் மனநிலை உள்ளவர் விவாதிக்கவே வரக்கூடாது. என்னைப்பொறுத்தவரை அத்தகையவர்களை ‘நம்பிக்கைநோயாளிகள்’ என்றே எண்ணுகிறேன்
//
from Facebook http://ift.tt/2a3DZvy