Tag: சுசீந்திரன்

  • விஸ்வம்பரா விஸ்வருபா

    அன்பில் சுந்தரரஜனை பார்த்த பிறகு ஸ்ரீரங்கம் விஸ்வருபா அடுக்குமாடி குடியிருப்பு நோக்கி பயணம். வழியிலேயே விஸ்வம்பரா நிறுவனத்தின் உரிமையாளர் பாலசுப்ரமணியை ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் அருகில் பார்த்தோம்.

    ராஜ கோபுரத்திலிருந்து விஸ்வருபா நோக்கி அம்மா மண்டபம் வழியாக செல்ல செல்ல ஆர்வம் அதிகமாகியது, ஆனால் அந்த் வீதியின் அகலம் ஒரு எமாற்றம், 30 அடி இருக்கும், அனால் ஆக்கிரமிப்பு மற்றும் திறந்த் கால்வாய் காரணமாக குறுகி உள்ளது.

    உள்ளே சென்று பாலசுப்ரமணியை சந்தித்து அவருடன் பகுதி A மற்றும் பகுதி B ஒவ்வொரு மாடியாக ஒவ்வொரு வீடாக சென்று பார்த்தோம். வீடு தேர்வுக்கு முக்கியமாக கோபுர தரிசனம், மதுரகவி ஸ்வாமி நந்தவனம் மற்றும் வாஸ்து.

    மதியம் உணவு நேரம் ஆனதால் கீழே இறங்கி பாலசுப்ரமணியின் மகன் மகேஷ் குமாரை சந்தித்து எங்களுடைய தேர்வு பற்றி பேசிவிட்டு, குடும்பத்துடன் உணவு இடைவெளியில் கலந்தாலோசித்து பிறகு சந்தித்து பேசுவதாக கூறி விடைபெற்றோம்.

    ஸத்குரு பவனில் உணவு உண்ணும்போது எல்லொருடைய கருத்தையும் கேட்டேன்.

    • ராதா – சரி
    • கிருத்திகா – சரி (ஆனால் இன்னும் பள்ளிக்கரனை தான்)
    • மாமா – சரி
    • அம்மா – சரி
    • அப்பா – முதலில் சரி, வற்புறுத்தி கேட்டபோது பிடிக்கவில்லை. அவருக்கு நான் தஞ்சாவூரில் அவர் பார்த்த வீட்டை பிடிக்கவில்லை என்பதால் கோபம், மண் சரியில்லை என்று எதோ காரணம். அடுக்குமாடி குடியிருப்பு அவருக்கு பிடிப்பதில்லை, சிறு நிலம் அதில் வீடு இருக்க வேண்டும். மாமாவுக்கும் அவருக்கும் சண்டை வந்துவிட்டது.

     

    நான் என்னுடைய காரணங்களை பட்டியலிட்டேன். இவற்றை சொல்லும்போது எனக்கும் என்னுடைய முடிவில் ஒரு தெளிவு எற்ப்பட்டது.

    • ஸ்ரீரங்க அபிமானம், கோபுர தரிசனம்.
    • ஸ்ரீ ஸ்ரீ அண்ணா அருகில் இருக்கிறார்.
    • மதுரகவி ஸ்வாமி அவர்களின் நந்தவனம்
    • விஸ்வம்பரா என்ற பெயர்,  கிருஷ்ண சைதன்ய மஹா பிரபுவின் பெயர்.
    • விஸ்வருபா என்ற பெயர், அவருடைய மூத்த சகோதரர் பெயர்.
    • பண முதலீடு – ஸ்ரீரங்கம் நகரம், தஞ்சாவூர் மற்றும் சென்னையில் நகரத்திற்கு அருகில் வாங்க முடியாது
    • 2வது வீட்டுக்கான வட்டிக் கடன் மூலம் வருமான வரி சேமிப்பு
    • 2-3 ஆண்டுகளாக சதுர அடி விலை குறையும் என்று எதிர்பார்த்து குறையவில்லை
    • ஏன் 60 லகரம்? வருமான வரி சேமிப்பு – குறைந்தது 1.5 லகரம் சேமிக்க முடியும்.
    • இரண்டு புரமும் திரந்த வெளி, இன்னோரு 100 வருடங்களுக்கு அங்கு கட்டிடம் வருவதர்க்கு வாய்ப்பில்லை.
    • அடுக்குமாடியில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற ஒரு ஆசை.
    • ஒரு பிடிப்பு, அடிக்கடி வரவேண்டும் என்று தோன்றும்.
    • தரமான கட்டுமானம்.

     

    ஒரு வழியாக விளக்கம் கொடுத்து, இரண்டு வீடுகளை தேர்வு செய்து திரும்பி விஸ்வருபா சென்றோம். மறுபடி அலசல், ஒன்று நன்றாக இருந்தால், ஒன்று குறை.  வசிக்கும் அறை நன்றாக இருந்தால் கோபுர தரிசனம் இருக்காது, பக்கத்து கட்டிடம் எழும்ப வாய்ப்பு, வெளிச்சம், சமையலறை, காற்றோட்டம். கடைசியாக J3 அல்லது c3 தேர்வு செய்து சென்றோம். ஆனால் J3 எற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டதால் திரும்ப ஆலோசனை, J4 கடைசி மாடியாக இருந்தாலும் பரவாயில்லை, வெயில் தாக்கம் குறைவாக இருக்க வழக்கமான தட்டோடு பதிக்காமல் இக்ளு ஓடு பதித்தால் அந்த தாக்கம் இருக்காது என்று மனத்தை தேற்றிக்கொண்டேன்.

    1 லகரம் செலுத்தி முன்பதிவு  செய்துவிட்டு வந்தோம்.

    வழக்கம் போல நான் மற்றவற்றை பெருமாளிடம் விட்டுவிட்டேன், உனக்கு நான் இங்கு வந்து உன்னை சேவித்து என்னுடைய வாழ்நாளை கழிக்க விரும்பினாள் இதை முடித்து கொடு என்று சொல்லிவிட்டேன்.

    கூகுள் வரைபட இணைப்பு

     

    [pe2-gallery album=”aHR0cDovL3BpY2FzYXdlYi5nb29nbGUuY29tL2RhdGEvZmVlZC9iYXNlL3VzZXIvMTA4MzE0NzAxNzkwNDEwOTkzMDUwL2FsYnVtaWQvNTc5MDc4MjMxNjkyMzgyMTUyMT9hbHQ9cnNzJmFtcDtobD1lbl9VUyZraW5kPXBob3Rv”]

     

     

     

     

  • அன்பில் சுந்தரராஜ பெருமாள்

    இன்று ராதாவுடைய 27வது திருமண நாள், அன்பில் சுந்தரராஜ பெருமாளை பார்க்க திருச்சியிலுருந்து மாந்துரை வழியாக அன்பில் சென்றோம். 108 திவ்ய தேசத்தில் 4வது தேசம். மின்சாரம் இல்லை, ஆனாலும் பெருமாளின் கிடந்த கோலம் அருமையான தரிசனம்.

  • ஸ்ரீரங்க வாசம் – 3

    எஸ்பிஸ் விஸ்வம்பரா பற்றி முதலில் குறிப்பிட்டதால் அதை பற்றி கருத்துக் கேட்டேன், அவர் தன்னுடைய நண்பர் ரவிச்சந்திரன் தான் அதனுடைய உரிமையாளர் என்றும் அவரிடம் பேசிவிட்டு அவருடைய அலைபேசி எண்னை தந்து பேசும்படி சொன்னார்.

    மாமாவிடம் அந்த எண்ணை தந்து நேரம் கிடைக்கும்போது பேசி சதுர அடி விலையை குறைக்க முயற்ச்சிக்க சொன்னேன்.