Tag: கோவில்

  • இஸ்கான் (ISKCON), பார்த்தா மற்றும் சின்ன க்ரூஷ்ணா

    இன்று ஆங்கில புத்தாண்டு, வழக்கம் போல கோவிலுக்கு சென்று வரலாம் என்று கிருத்திகா. எனக்கு என்றுமே புத்தாண்டு என்பதால் அதுவும் கோவில் என்றால் என்ன கசப்பு. புதியதாக இன்று குருவாயூரப்பன் சென்றுவிட்டு பிறகு ஆஞ்சனேயர் பார்க்க போகலாம் என்றால்.

    அப்பவுக்கு சட்டையை கழற்றுவது பிடிக்காது எனவே, நான் வரவில்லை என்றார். நான், பார்த்தா, மீரா, கிருத்திகா மற்றும் அம்மா நுழைந்தோம்.

    குருவாயூரப்பனை பார்தேன், தலையில் மயிலறகு, என்னை பார்த்து ஏன் என்னை பார்க்க வருவதில்லை என்று கேட்பது போல் இருந்த்தது.

    பார்த்தாவுக்கும் மீராவுக்கும் க்ருஷ்ணாவை காட்டினேன்.

    மதியம் உணவு உண்டுவிட்டு கண்ணியில் உட்கார்ந்து இருந்த பொழுது கிருத்திகா மறுபடியும் இஸ்கான் போகலாம் என்றாள்.

    உட்கார்ந்து யோசித்த பொழுது, 22வது நாள் (சென்ற சனிக்கிழமை) சென்று வந்த பிறகு தான் பார்த்தா ஆசையாக க்ருஷ்ணா பற்றிய படம் பார்க்க வேண்டினான். க்ருஷ்ணாவின் லீலையே அலாதி. அவனுக்காக யுடூயுபில் (youtube) தேடி ஒரு படத்தை http://www.youtube.com/watch?v=61AcVOgexMo காண்பித்தேன், பிடித்திருந்த்தது, அமர் சித்திர கதைகளோடு சட்டென்று ஒற்றுமைபடுத்தினான்.

    அதற்கு பிறகு அவனுக்காக மீண்டும் தேடியதில் சின்ன க்ருஷ்ணா (little krishna) கிடைத்தான். அனிமேஷன் அருமை, அதில் க்ருஷ்ணாவாக வரும் பாத்திரம் அருமை, அந்த குழந்தை முகம், குழல் ஊதும் அழகு, அரக்கர்களை அழிக்கும் அழகு, அனைத்தயும் நேர்தியாக வடிவமைத்திருந்தார்கள். அப்புறம் அதை அவனுக்கு இறக்குமதி செய்து http://www.youtube.com/playlist?list=PLB973DBD69DB69061 மடிக்கணினியில் ஏற்றி கொடுத்தேன். விரும்பி பார்த்தான்.

    இன்று மறுபடியும் குருவாயூரப்பனாக தரிசனம். மறுபடி இஸ்கானுக்கு அழைப்பு.

    சென்ற முறை சென்ற பொழூது கூட்டமே இல்லை, இந்த முறை அதையும் எதிர்பார்த்து சென்றால், எதிர்பார்க்காத அளவு கூட்டம், கார் உள்ளே செல்ல முடியவில்லை, ஆரம்பத்திலேயே அதை பார்க் செய்துவிட்டு நடந்து பயணம்.

    உள்ளே நுழைந்ததும், ஹரே மந்த்ரம் 108 தடவை உச்சரிக்க ஒரு பக்தர் சொன்னார், முதலில் பார்த்தா செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை, ஆனால் க்ருஷ்ணாவின் கருணை, ஒவ்வொரு கல்லாக உச்சரித்து தாண்டினான், இறுதியாக மறுபடியும் எல்லா கற்களையும் எண்ணி உறுதி செய்தான். கிருத்திகாவுக்கு ரொம்ப மகிழ்ச்சி.

    உள்ளே சென்றோம், அங்கு பஜனை நடந்து கொண்டிருந்தது, ஆச்சர்யமாக அப்பா அதில் கலந்து நடனமாடிக் கொண்டிருந்த்தார்.

    க்ருஷ்ணாவின் அழைப்பு, மந்த்ர உச்சரிப்பு, அப்பாவின் நாம சங்கீர்த்தனம், நல்ல சூழல், இந்த நாள் மறக்க முடியாத நாள்.

     

  • அன்பில் சுந்தரராஜ பெருமாள்

    இன்று ராதாவுடைய 27வது திருமண நாள், அன்பில் சுந்தரராஜ பெருமாளை பார்க்க திருச்சியிலுருந்து மாந்துரை வழியாக அன்பில் சென்றோம். 108 திவ்ய தேசத்தில் 4வது தேசம். மின்சாரம் இல்லை, ஆனாலும் பெருமாளின் கிடந்த கோலம் அருமையான தரிசனம்.

  • பரனூர் – மறக்க முடியாத நாள்

    இன்றைய நாள் ஒரு மறக்க முடியாத நாள்.

    1. இன்று கோகுலாஷ்டமி
    2. முதன் முறையாக கிருத்திகா, பார்த்தா மற்றும் மீராவுடன் பரனூர் சென்றது.
    3. என்னுடைய குருவான திரு ஸ்ரீ ஸ்ரீ அண்ணாவை நந்த உற்சவத்தில் கண்டு களித்தது
    4. முதன் முறையாக தைரியமாக அண்ணாவிடம் சென்று அவர் மீது வெண்ணை தடவி அவரிடம் கொஞ்சம் கொடுத்து அதை அவர் என் மார்பில் அடித்தது
    5. கிருத்திகாவுக்கு அண்ணா கன்னத்தில் வெண்ணை அப்பி விட்டது, அதை ஏற்றதும் அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி மற்றும் பெருமிதம்
    6. பார்த்தா மற்றும் மீரா அண்ணாவை சேவித்து ஆசிர்வாதம் பெற்றது.
    7. நெடு நாளைக்கு பிறகு தமிழில் நாட் குறிப்பு எழுத ஆரம்பித்தது.

     

    நான் அண்ணாவை முதன் முறையாக தரிசித்த நாள் தெளிவாக நினைவில் இல்லை, அது இன்றும் ஒரு குறை, அது கிருத்திகா, பார்த்தா மற்றும் மீராவுக்கு பதியவேண்டும் என்ற எனது அவா இந்த நாட் குறிப்பின் மூலம் நிறைவேறுகிறது.