//இங்கே இந்துமதம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல. அதில்தான் நம்முடைய பல்லாயிரமாண்டு மரபும் பண்பாடும் மெய்ஞானமும் சிந்தனையும் தொகுக்கப்பட்டுள்ளது. அதை துறக்கும்போது நாம் பிள்ளைகளை பண்பாட்டுப்பின்னணி அற்றவர்களாக வளர்க்கிறோம்
…
இப்படி மதத்தை விலக்குகிறோம் என்று நம் மரபின் பண்பாட்டையும் சிந்தனையையும் இளமையிலேயே விலக்கி பிள்ளைகளை அதிதூய உழைக்கும் இயந்திரங்களாக, வெறிகொண்ட நுகர்வோராக, எதையும் புரிந்துகொள்ளமுடியாத வீணர்களாக, அதை மறைக்க எள்ளிநகையாட மட்டுமே தெரிந்த அசடுகளாக ‘அறிவியல் முறைப்படி’ வளர்க்கிறோம்//
from Facebook http://ift.tt/10bOohB
via IFTTT