ஸ்ரீரங்க வாசம்

பண முதலீடு சம்பந்தமாக வீடு தேடி வருவதாக கிருத்திகா அக்கா ராதாவிடம் தெரிவித்ததாகவும் அதே நேரத்தில் அவளும் ஸ்ரீரங்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு இருப்பதாக மாமாவுடைய நண்பர் தெரிவித்ததாக கூறினாள்.

இது சம்ப்ந்தமாக அப்பாவிடம் தஞ்சாவூரில் பார்க்க சொல்லியிருந்தேன், ஆனால் ராதா ஸ்ரீரங்கம் பற்றி சொன்னவுடன் அங்கு தேடினால் என்ன என்று தோன்றியது.

அவளுக்கு ரங்கனிடம் அலாதி பிரியம் உண்டு. அதனால் மாமா வேலையில் ஓய்வு பெற்றதும் அங்கு சென்றுவிட வேண்டும் என்ற திட்டத்தில் அதே அடுக்குமாடியில் முயற்சி செய்ததுவும் அது சில காரணங்களுக்காக நடக்காததுவும் நினைவு வந்தது. நாமும் அதே மாதிரி வேலையில் ஓய்வு பெற்றதும் அங்கு சென்று நிரந்தரமாக வசித்தால் என்ன் என்று தோன்றியது. தோராயமாக 30 லகரம் ஆகும் என்று சொன்னாள். நான் அது சம்பந்தமாக மேலும் விசாரிக்க சொன்னேன்.

எல்லாம் பெருமாள்/ரங்கன் செயல்.