அண்ணா தன்னுடைய படத்தை பார்த்து பின்பு கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.
[pe2-gallery album=”http://picasaweb.google.com/data/feed/base/user/108314701790410993050/albumid/5909688781450224897?alt=rss&hl=en_US&kind=photo” ]
அண்ணா தன்னுடைய படத்தை பார்த்து பின்பு கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.
[pe2-gallery album=”http://picasaweb.google.com/data/feed/base/user/108314701790410993050/albumid/5909688781450224897?alt=rss&hl=en_US&kind=photo” ]
Dear Santhan,
2013/8/4 Srisriannaorg <srisriannaorg@gmail.com>
Dear thiru,
I am happy that you visited with your family to have srisrianna’s blessing. Too bad that your dad couldn’t turn up. Probably you have to bring him again before this program ends.
The Nama initiation is a very special event in ones life. It changes ones life for good. You will certainly feel the changes it brings soon. I am so happy that I was there to take you to srisrianna.
The website work is a gift given to us. Millions of devotees are going to view it. I use to feel that the very purpose of my IT education was realised only after Anna’s site. I pray srisrianna to bless us so that we make this a class site.
Do mail me or call me whenever you feel. Let us bring lot of changes within this month, before this great program ends.
Your kids are great. I would loved to have more time with them. Probably you will bring them again. Convey my love to them.
All the best,
Radhekrishna,
Santhan
Sent from my iPad
இன்று திரு சந்தான கோபலன் அவர்கள் அண்ணாவிடம் நம்முடைய இணையதளம் செய்தவராக அறிமுகம் செய்தார்.
நானும் அம்மாவும் அண்ணாவிடம் நாம ஜபம் எடுத்துக்கொண்டோம். ‘ராம ராம’ என்று சொல்லிவிட்டு ‘சொல்லிண்டே இரு’ என்றார்.
அண்ணாவின் கிருபையால் நாம ஜெபம் தொடர்ந்து சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
அண்ணா இன்று முதன் முறையாக என்னிடம் பேசினார்.
நேற்று திருப்பதி சென்று கோவிந்தாவை தரிசனம் செய்து பிரசாதம் எடுத்து சென்று ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவிடம் கொடுத்தவுடன் அண்ணா “ஆஹா” என்றார்.
பரம திருப்தி.
இன்று ஆங்கில புத்தாண்டு, வழக்கம் போல கோவிலுக்கு சென்று வரலாம் என்று கிருத்திகா. எனக்கு என்றுமே புத்தாண்டு என்பதால் அதுவும் கோவில் என்றால் என்ன கசப்பு. புதியதாக இன்று குருவாயூரப்பன் சென்றுவிட்டு பிறகு ஆஞ்சனேயர் பார்க்க போகலாம் என்றால்.
அப்பவுக்கு சட்டையை கழற்றுவது பிடிக்காது எனவே, நான் வரவில்லை என்றார். நான், பார்த்தா, மீரா, கிருத்திகா மற்றும் அம்மா நுழைந்தோம்.
குருவாயூரப்பனை பார்தேன், தலையில் மயிலறகு, என்னை பார்த்து ஏன் என்னை பார்க்க வருவதில்லை என்று கேட்பது போல் இருந்த்தது.
பார்த்தாவுக்கும் மீராவுக்கும் க்ருஷ்ணாவை காட்டினேன்.
மதியம் உணவு உண்டுவிட்டு கண்ணியில் உட்கார்ந்து இருந்த பொழுது கிருத்திகா மறுபடியும் இஸ்கான் போகலாம் என்றாள்.
உட்கார்ந்து யோசித்த பொழுது, 22வது நாள் (சென்ற சனிக்கிழமை) சென்று வந்த பிறகு தான் பார்த்தா ஆசையாக க்ருஷ்ணா பற்றிய படம் பார்க்க வேண்டினான். க்ருஷ்ணாவின் லீலையே அலாதி. அவனுக்காக யுடூயுபில் (youtube) தேடி ஒரு படத்தை http://www.youtube.com/watch?v=61AcVOgexMo காண்பித்தேன், பிடித்திருந்த்தது, அமர் சித்திர கதைகளோடு சட்டென்று ஒற்றுமைபடுத்தினான்.
அதற்கு பிறகு அவனுக்காக மீண்டும் தேடியதில் சின்ன க்ருஷ்ணா (little krishna) கிடைத்தான். அனிமேஷன் அருமை, அதில் க்ருஷ்ணாவாக வரும் பாத்திரம் அருமை, அந்த குழந்தை முகம், குழல் ஊதும் அழகு, அரக்கர்களை அழிக்கும் அழகு, அனைத்தயும் நேர்தியாக வடிவமைத்திருந்தார்கள். அப்புறம் அதை அவனுக்கு இறக்குமதி செய்து http://www.youtube.com/playlist?list=PLB973DBD69DB69061 மடிக்கணினியில் ஏற்றி கொடுத்தேன். விரும்பி பார்த்தான்.
இன்று மறுபடியும் குருவாயூரப்பனாக தரிசனம். மறுபடி இஸ்கானுக்கு அழைப்பு.
சென்ற முறை சென்ற பொழூது கூட்டமே இல்லை, இந்த முறை அதையும் எதிர்பார்த்து சென்றால், எதிர்பார்க்காத அளவு கூட்டம், கார் உள்ளே செல்ல முடியவில்லை, ஆரம்பத்திலேயே அதை பார்க் செய்துவிட்டு நடந்து பயணம்.
உள்ளே நுழைந்ததும், ஹரே மந்த்ரம் 108 தடவை உச்சரிக்க ஒரு பக்தர் சொன்னார், முதலில் பார்த்தா செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை, ஆனால் க்ருஷ்ணாவின் கருணை, ஒவ்வொரு கல்லாக உச்சரித்து தாண்டினான், இறுதியாக மறுபடியும் எல்லா கற்களையும் எண்ணி உறுதி செய்தான். கிருத்திகாவுக்கு ரொம்ப மகிழ்ச்சி.
உள்ளே சென்றோம், அங்கு பஜனை நடந்து கொண்டிருந்தது, ஆச்சர்யமாக அப்பா அதில் கலந்து நடனமாடிக் கொண்டிருந்த்தார்.
க்ருஷ்ணாவின் அழைப்பு, மந்த்ர உச்சரிப்பு, அப்பாவின் நாம சங்கீர்த்தனம், நல்ல சூழல், இந்த நாள் மறக்க முடியாத நாள்.
http://www.sofworld.org/12th-nco-result/TN115502026
இது நடந்தது செப் 27 2012, அடுத்த நாள் நான் வீட்டில் விடைகளை கேட்ட பொழுது கேட்கப்பட்ட35 வினாவில் 21 க்கு சரியாக விடை சொன்னான்.
எனக்கு அவன் இவற்றை முயற்ச்சி செய்ய வேண்டுமே தவிர நிறைய மதிப்பெண் பெற வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து கட்டாயபடுத்தவில்லை.
ஆனால் உண்மையாகவே நன்றாக அவனாகவே முன்வந்து முயற்ச்சித்தான்.
[pe2-gallery album=”aHR0cDovL3BpY2FzYXdlYi5nb29nbGUuY29tL2RhdGEvZmVlZC9iYXNlL3VzZXIvMTA4MzE0NzAxNzkwNDEwOTkzMDUwL2FsYnVtaWQvNTgwMzQ1NzIwNjgwMTc2MDI4OT9hbHQ9cnNzJmFtcDtobD1lbl9VUyZraW5kPXBob3Rv”]
ராதா திருவரங்கன் உலா புத்தகத்தை பற்றி சொன்ன போது நானும் அதை படிக்க ஆர்வம் கொண்டு இனையதளத்தில் உடனே வாங்கி படிக்க ஆரம்பித்தேன்.
எற்கனவே ஸ்ரீ ஸ்ரீ அண்ணா மூலமும் பொன்னியின் செல்வன் குழுமம் மூலமும் தெரிந்து இருந்தாலும் முழுவதும் தெரியாது.
படிக்க படிக்க ஆர்வம், சோகம், வியப்பு, பெருமை எல்லாம் ஒரு சேர உணர்ந்தேன்.
அரங்கனை காப்பாற்ற 47 வருடங்கள் அவருடைய பக்தர்கள் பட்ட பாடு, துருக்கியர்கள் செய்த கொடுமைகள் அதனால் எற்பட்ட கலாசார சீர் கேடுகள், அந்த நாளைய வரலாறு நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கதைபடி திருவரங்கம் அரங்கன் வன வாசத்தின் பொழுது சீரழிக்கபட்டு 47 வருடம் முறையான பூஜை இல்லாமல் மறுபடி புத்துயிர் பெற்று இன்று பார்க்கும் பொழுது, சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் நடந்ததிற்கான அறிகுறி இல்லை. அவருடைய ஆட்சி இன்றும் தொடர்கிறது.
ஸ்ரீ ஸ்ரீ அண்ணா சொன்னது போல், அரங்கன் 47 வருடம் வன வாசம் போன காரணம் என்ன? அன்றைய அந்தணர்களுடைய பக்தி குறைவு மற்றும் அனாசாரம் தானா? அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?
அரங்கன் தான் புரியவைக்க வேண்டும்.
படித்து முடித்தவுடன் உடனே பார்த்து “உன்னுடைய லீலை புரியவில்லை” என்று விண்ணப்பித்தேன்.