திருவரங்கன் உலா

ராதா திருவரங்கன் உலா புத்தகத்தை பற்றி சொன்ன போது நானும் அதை படிக்க ஆர்வம் கொண்டு இனையதளத்தில் உடனே வாங்கி படிக்க ஆரம்பித்தேன்.

எற்கனவே ஸ்ரீ ஸ்ரீ அண்ணா மூலமும் பொன்னியின் செல்வன் குழுமம் மூலமும் தெரிந்து இருந்தாலும் முழுவதும் தெரியாது.

படிக்க படிக்க ஆர்வம், சோகம், வியப்பு, பெருமை எல்லாம் ஒரு சேர உணர்ந்தேன்.

அரங்கனை காப்பாற்ற 47 வருடங்கள் அவருடைய பக்தர்கள் பட்ட பாடு, துருக்கியர்கள் செய்த கொடுமைகள் அதனால் எற்பட்ட கலாசார சீர் கேடுகள், அந்த நாளைய வரலாறு நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கதைபடி திருவரங்கம் அரங்கன் வன வாசத்தின் பொழுது சீரழிக்கபட்டு 47 வருடம் முறையான பூஜை இல்லாமல் மறுபடி புத்துயிர் பெற்று இன்று பார்க்கும் பொழுது, சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் நடந்ததிற்கான அறிகுறி இல்லை. அவருடைய ஆட்சி இன்றும் தொடர்கிறது.

ஸ்ரீ ஸ்ரீ அண்ணா சொன்னது போல், அரங்கன் 47 வருடம் வன வாசம் போன காரணம் என்ன? அன்றைய அந்தணர்களுடைய பக்தி குறைவு மற்றும் அனாசாரம் தானா? அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?

அரங்கன் தான் புரியவைக்க வேண்டும்.

படித்து முடித்தவுடன் உடனே பார்த்து “உன்னுடைய லீலை புரியவில்லை” என்று விண்ணப்பித்தேன்.