Category: facebook

  • Back To The Land Animated GIF

    BTTL Rocked ! Weekend worth spent. Learned lot related Unconference, Gifted Economy, Community Farming, Alternate Education, Eco Friendly Home, Seeds, Natural Healing. With great Hospitality from Parthasarathy and Rekha who opened up their Village/Home/School for the event. On top of all was getting to know the BTTL Community. Well planned and executed.
    from Facebook http://ift.tt/1WhRB8l
    via IFTTT

  • Is India Selling Out Its Tigers?

    //But the Modi government’s aggressive focus on development threatens both the cats’ future and the nation’s environment. India is razing forests and flooding them with dams, giving the go-ahead for new mines and pushing rapid industrialization. The 2015 budget cut funding for the environment ministry by 25 percent and support for tiger protection by 15 percent.
    ..
    Last August, a high level government committee was given the impossible task of reviewing the country’s major environmental laws and suggesting overhauls, all within a few months. Most of the committee members lacked environmental expertise, recommendations were not reviewed by independent authorities and most outside input was “invited.”

    The resulting report recommended radical changes to the country’s legal framework governing forests, wildlife, the environment, water, air and land rights that would fast-track coal mines, dams, roads, railways and other projects//
    from Facebook http://ift.tt/1IxDXXm
    via IFTTT

  • அமெரிக்க இலட்சியவாதம்

    //இரண்டு அமெரிக்காக்கள் உண்டு என்று புரிந்துகொள்வது நல்லது . ஒன்று முதலாளித்துவ அமெரிக்கா. கறாரான வணிகம் மூலமும் தொழில்நுட்ப மேலாதிக்கம் மூலமும் உலகை அடக்கி ஆளும் அமெரிக்கா அது. இன்னொன்று ஜனநாயக அமெரிக்கா. உலகுக்கே ஜனநாயகம், தனிமனித உரிமை ஆகியவற்றை கற்றுக்கொடுத்த நாடுகளில் ஒன்று அது. இன்றும் உலகின் மனசாட்சியாக அமெரிக்க ஜனநாயகம் விளங்குகிறது. அமெரிக்காவின் சுதந்திர சிந்தனை, தனிமனித உரிமையை மதிக்கும் அரசாங்க அமைப்பு, அறிவுக்கு அங்கே இருக்கும் மதிப்பு என்பவை உலகுக்கே முன்னுதாரணமானவை.
    ..
    ஆனால் மறுபக்கம் நம் மக்கள் அனைவருமே தங்கள் பிள்ளைகள் படித்து எப்படியாவது அமெரிக்கா போய் குடியேறிவிடவேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் அமெரிக்காவில் போய் குடியேற விரும்பாத இந்தியர்கள் முனிவர்களாகத்தான் இருப்பார்கள். [முனிவர்களுக்கே அங்கே ஆசிரமக்கிளைகள் உள்ளன] அமெரிக்காவைக் கரித்துக்கொண்டும் பல இடதுசாரிகளின் பிள்ளைகள் கூட அமெரிக்காவின் குடிமக்கள்தான். அமெரிக்காவின் மோஸ்தர்கள்தான் இந்தியாவை ஆள்கின்றன. அமெரிக்கபாணி வணிகம்தான் நம்முடைய முன்னுதாரணம்.//
    from Facebook http://ift.tt/1OK71wp
    via IFTTT

  • புண்ணியம் – கலாம் கண்ட தொழில்நுட்பத்தின் ராமேஸ்வர இதயம்

    //காந்தி எப்போதுமே குவிமையமற்ற தொழில்நுட்பங்களை முன்வைத்தார்.

    ராட்டை ஒரு தொழில்நுட்பக் குறியீடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சாண எரிவாயுவாகட்டும், பசு பாதுகாப்பு ஆகட்டும், லாரி பேக்கர் பின்னாட்களில் பிரபலப்படுத்திய உள்ளூர் கட்டடக் கலை தொழில்நுட்பம் ஆகட்டும், காந்தியத் தொழில்நுட்பமும் காந்தியப் பொருளாதாரமும் குவிமையத்தன்மை அற்றவை. மக்கள் தொழில்நுட்பங்கள்.

    ஆனால் நேரு, குவிமையம் கொண்ட தொழில்நுட்பங்கள், பெரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் மூலம் பெரும் பொருளாதார மற்றும் சமுதாய மாற்றங்களைக் கொண்டுவந்துவிட முடியும் என நம்பினார். அப்படி ஒரு மாற்றம் வரும்போது, இந்தியாவின் பண்பாடும் மதிப்பீடுகளும்கூட மாறிவிடும் என நம்பினார். இந்தியப் பண்பாடு உருவாக்கிய சமுதாய அமைப்புகள், அவற்றின் மதிப்பீடுகள் ஆகியவற்றின் அழுகிய கனிகளிலிருந்து மரத்தையே வெறுக்கும் மனநிலைக்கு வந்து சேர்ந்திருந்தார் நேரு.


    நம் ‘செக்யூலர்’ அரசாட்சி அமைப்புகளால் சில பத்தாண்டுகள்கூட காப்பாற்ற முடியாத இந்த நீர்நிலைகளை, ஆயிரமாண்டுகளுக்கு மேலாக ‘புண்ணியம்’ என்கிற பண்பாட்டு-உளவியல் கோட்பாட்டின் மூலம் காப்பாற்றி வந்திருக்கிறது நம் பாரம்பரியம். இந்தப் பண்பாட்டுச் சூழல் முற்றிலும் அறுந்துபோகும் முன்னர், அதில் தோய்ந்து வளர்ந்திருக்கிறார் டாக்டர் அப்துல் கலாம். இந்தப் பண்பாட்டு அறிவுதான், அவரை நேருவிய தொழில்நுட்பப் பார்வையிலிருந்த குறைபாடுகளை களைந்து, அதனை முழுமையடைய வைத்தது போலும்.//
    from Facebook http://ift.tt/1SURuuQ
    via IFTTT

  • அஞ்சலி- சசிப்பெருமாள்

    //சாராயக்காசில்தான் அரசியலே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அனைத்து இலவசங்களும் டாஸ்மாக்கால்தான். அவற்றிலுள்ள ஊழலே அரசியலின் கொண்டாட்டம்.டாஸ்மாக் தமிழக உழைப்பாளிகளை ஒட்டுமொத்தமாக அழித்துக்கொண்டிருக்கிறது

    குடி இந்தியாவின் அடித்தள மக்களின் வாழ்க்கையை, கிராமப்பொருளியலைச் சூறையாடுவதைக் கண்ட காந்தி அதற்கெதிரான போராட்டத்தை சுதந்திரப்போரின் மையமான செயல்திட்டங்களில் ஒன்றாக முன்வைத்தார்

    தமிழகத்தில் குடியை அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்து அனைத்துச் சமூகத்தடைகளையும் அழித்து ஒரு தலைமுறையையே குடிக்குள் செலுத்தியவர் மு.கருணாநிதி. தமிழக வரலாற்றில் அவருக்கு ஏதேனும் இடமுண்டு என்றால் அது இதுதான்

    சசிப்பெருமாளை திருப்பூர் அறம் அறக்கட்டளை விழாவில் நேரில் சந்திக்கவும் வணங்கி ஆசிபெறவும் வாய்ப்பு கிடைத்தது. அதிகம் பேசாத எளிய மனிதர். தன் வாழ்க்கையின் இலக்கென்ன என வகுத்துக்கொண்டவர். செயல்மூலம் காந்தியை அறிந்தவர். காந்தியை அறிய சிறந்த வழி அதுவே. அதன் மூலம் காந்தியாகவே ஆகிவிடுதல். காந்தியாகவே நான் கண்ட சசிப்பெருமாளுக்கு என் அஞ்சலி
    from Facebook http://ift.tt/1IBCeld
    via IFTTT

  • 1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக!

    //இந்துஞானமரபு என்று நாம் இன்று சொல்லும் இந்தப்பாரம்பரியம் என்பது மூவாயிரம்வருடம் தொடர்ச்சியாக வளர்ந்த அந்த உரையாடலின் விளைவே. அந்த உரையாடலின் வழியாக உருவான ஒத்திசைவே இந்திய சமூகத்தை உருவாக்கியது. இந்திய சமூக உருவாக்கம் என்பது ஒரு பிரம்மாண்டமான தொகுப்புச்செயல், ஓர் இணைப்புப்பணி, ஒரு சமரசநிகழ்வு.

    மத்தியக்கிழக்கின் ஒற்றைத்தரிசன மதங்கள் பரவிய நிலங்களில் என்ன நடந்தது என்பதைப் பார்க்கும்போது இந்தியப்பெருநிலத்தின் வரலாறு பெரும் ஆச்சரியத்தையே அளிக்கிறது. இங்கே பண்பாட்டுக்கலப்பு நடந்துள்ளதே ஒழிய பண்பாட்டு அழிப்பு நிகழவில்லை. ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் சிந்துசமவெளி நாகரீகத்தில் இருந்த பண்பாட்டுக்கூறுகள் கூட இன்றும் அழியாமல் நீடிக்கின்றன. இந்தியப்பெருநிலத்தின் தொன்மையான பண்பாட்டுக்கூறுகள் எதுவுமே முற்றாக அழிந்ததில்லை.காரணம் இங்கே நடந்தது கொள்வதும் கொடுப்பதும் அடங்கிய ஒரு பண்பாட்டு உரையாடல்தான்.
    ..
    இந்த பன்மைத்தன்மை, உரையாடல்தன்மை, பண்பாட்டுப் பரிமாற்றம்தான் இந்திய மரபின் வெற்றிக்கும் சிறப்புக்கும் காரணம்.//
    from Facebook http://ift.tt/1GSvbCk
    via IFTTT

  • Ilayathalaimurai

    from Facebook http://ift.tt/1LLClLZ
    via IFTTT